Monday, 3 April 2017

பானகம்

பானகம் என்பது கோடைக்காலத்தில் உடலில் நீர் வறட்சியை சரி செய்து, தேவையான நீர்ச்சத்தைக் கொடுத்து வெயில் கால நோய்களிலிருந்து காக்கும் அருமையான பானமாகும். 

தேவை: 
வெல்லம் - 200கிராம்
புளி - 50 கிராம்
பொடித்த சுக்கு - ஒரு தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் தூள் - ஒரு விரல்பிடி
ஏலக்காய் - 2
புதினா இலைகள் - 5
எலுமிச்சைப்பழம் - 1

செய்முறை:
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். புளியையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெல்லக்கரைசலுடன் புளிக்கரைசலையும் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் புதினா சேர்த்து பறிமாறலாம். இது சுவை மிக்க பானமாகும். 
வெல்லத்திற்கு பனை வெல்லம் சேர்த்து செய்தால் சுவை கூடும். சில்லென்று அருந்த விரும்புபவர்கள் குளிர்வித்தும் அருந்தலாம் இதமாக இருக்கும்.


No comments:

Post a Comment